Thursday, January 10, 2008

பட்டுக்கோட்டை அருகே டாக்டர் வெட்டப்பட்டார்

மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டியை சார்ந்த பழனிவேல் என்பருக்கு கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.அருகே உள்ள மதுக்கூரில் டாக்டர்.தனபால் மருத்துவமனைக்கு வந்தனர்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லுங்கள் என்னிடம் போதிய கருவிகள் இல்லை என்பதால் அங்கு செல்லுங்கள் என்றார்.
பட்டுக்கோட்டை போகும் வழியில் பழனிவேல் என்பவ ர் இ றந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர் தனபாலை அரிவாளாலால் வெட்டப்பட்டார்.டாக்டர் உடனே பட்டுக்கோட்டை செல்லப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பத்தால் அதிர்ச்சி அடைந்த பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,அனைத்து மெடிக்கல் நிர்வாகிகளும் மூன்று நாள் மருத்துவசேவை செய்யவில்லை. 09/1/08 அன்று மாலை பேரணி ஏற்பாடு செய்து பட்டுக்கோட்டை சுற்று வட்டார டாக்டர்கள்,மெடிக்கல் நிர்வாகிகள்,பாரமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பேரணி ஆர்.டி.ஒ. அலுவலகம் வரை நடந்து சென்று வெட்டியவர்களை கைது செய்ய கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.



அதிராம்பட்டினத்திலும் அனைத்து டாக்டர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கு உள்ளயினர்.

பட்டுக்கோட்டை டாக்டர் செல்லப்பன் அவர்களின் சகலைதான் மதுக்கூர் டாக்டர் தனபால் என்பவர் ஆவார்.

0 comments: