Friday, January 11, 2008

அதிரையில் தவ்ஹீத் ஜாமத்தின் கண்டன ஆர்பாட்டம்

0 comments



அதிராம்பட்டித்தில் தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக 11/01/08 அன்று மாலை 5 மணி அளவில் குஜராத் முதல்வர் மோடி தமிழக வருகையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இதில் இவ்வவைப்பின் தொண்டர்கள் பல்வேறு கோஷங்கள் மோடியை எதிர்த்தும்,ஜெயலலிதாவையும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். பின் போலீசார் அனனவரையும் கைது செய்து அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அங்கு மோடி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து கூட்டத்தில் எடுத்து கூறினர். மாலை 6.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.




பாரத் கல்லூரி தாலாளர் இரயிலில் அடிபட்டு இறந்தார்

0 comments
மகிழங்கோட்டையைச் சேர்ந்த நாடிமுத்து அவர்களின் மகன் கணேசன் என்பவர் 10/01/08 அன்று காலை 5.45 மணிக்கு வாக்கிங் செல்லும் போது தஞ்சையில் இரயிலில் அடிபட்டு இறந்தார். இவர் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி,நிர்வாகவியல் கல்லூர், மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட்ஆகியவற்றுக்கு தாலாளர் ஆவார். அனைத்து கல்லூரிகளையும் தஞ்சையில் நடத்தி வருகிறார்.இவர் பேராசிரியர் ஆவார்.

இவருக்கு விக்ரம் என்ற மகன் உள்ளார். அன்னாரின் இறுதி சடங்கு இன்று மாலை 3.மணிக்கு அவரது சொந்த ஊரான மகிழங்கோட்டையில் தகனம் செய்யப்பட்டது. ஏராளாமான சுற்று வட்டார பொதுமக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய புதிய வருட பிறப்பு


நேற்று இஸ்லாமிய புதிய வருட பிறப்பு. அதிரையில் உள்ள தைக்காலில் 10 நாட்கள் சிறப்பு பயான் மற்றும் மெளத்து ஓதி ஏழை மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது.
அதிரையில் உள்ள இரண்டு தைக்கால்களிலும் இவை நடைபெறுகிறது கடைசி பிறை 10 ல் அனைத்தும் நிறைவுபெறுகிறது..