Monday, January 07, 2008

கா.மு.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக கூட்டம்

0 comments
காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி நிர்வாக கூட்டம் திங்கள் கிழமை மதியம் 2.00 மணிக்கு நடந்தது. பள்ளி தாலாளர் முஹம்மது அஸ்லம் ஆசிரியர்களின் கவனக்குறைவு, மாணவர்களின் மதமோதல் போக்குபற்றி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களை மதமோதல்களுக்கு தூண்டிவிடும் ஒரு சில மாணவர்களை,
ஆசிரியர்களை, அவர்களின் பணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார், தாலாளர் முஹம்மது அஸ்லம் அவர்கள்.

2003 ஆண்டு முதல் பள்ளியின் 10,12ம் வகுப்புகளின் மாணவர்களின் விழுக்காடு தரம் குறைவாக உள்ளது. பள்ளியின் வளர்ச்சியின் தரமும் அண்மை வருமாக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டைவிட மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது.

ஒரு சில ஆதாயம் தேடும் அமைப்புகள்,(எல்லா அமைப்புகளும்) மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது நிகழ்வாகிவிட்டது. மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை இல்லாத இந்த அமைப்புகள் எந்த நன்மைகள் செய்ய வில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்ரே !


பல அமைப்புகளும் இருந்தும் மாணவர்களுக்கு என்ன செய்தார்கள். என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பின் மீது அக்கறை இல்லாத பட்சத்தில் அம்மாணவன் பள்ளிக்கு தேவையா ! நீங்களே சொல்லுங்கள்

வருகிற 10,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வின் நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளியில் சிறந்த மாணவானகவும், அதிக மதிப்பெண்கள் பெற்று, உங்களை உலகிற்கு அறிமுகம் செய்த பெற்றோர்களுக்கும்,படித்த பள்ளிக்கும்,அனைத்து மாணவர்களுக்கும் உதாரணமாகவும்,வெற்றியின் முகமாகவும் இருக்க இறைவனை வேண்டுவோமாக !

பெற்றோர்கள் கவனத்திற்கு அரையாண்டுத்தேர்வு முடிந்து அனைத்து மதிப்பென்கள் அறிவிக்கப்படுவிட்டன.தங்கள் பிள்ளைகளின் மார்க் சரிசெய்யும்படி கேட்டுகொள்கிறோம். மாதாந்திர பெற்றோர்களின் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும்படி வேண்டுகிறோம்.

அதிராம்பட்டினம் போரூராட்சி

0 comments


அதிராம்பட்டினம் போரூராட்சியின் சார்பாக அனைத்து தூய்மையின் விளக்க கிராமத்து நடனம் மற்றும் விளக்க பொதுகூட்டம் திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது.ஏராளமான பொதுமக்களுக்கு தூய்மையின் சிந்தனைகளை எடுத்துரைத்தனர்.மேலும் பல கருத்துகளும் மக்களிடம் வினவினர். தூய்மையில்லாமல் உள்ளதால் ஏற்படும் விளைவுகளும், பாதகம் போன்றவற்றை கூறினார்கள்