இந்தியாவில் வாய்ப்களை பயன்படுத்தலாமா? வாய்ப் பயன்படுத்துவது இந்தியாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்று பயமுறுத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். call initiation and call termination என்று இரண்டு வகை உண்டு. PSTN (Public switch telephone network) என்று சொல்லப்படுவது யாதெனில் நமது டெலிபோன் எக்ஸேஞ்ச் வழியாக இயங்கும் தொலைப்பேசிகள். இணையத்தின் வழியாக callகளை தொடங்கி(call initiation) எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பேசுவது, ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு பேசுவது TRAI (Telephone Regulatory Authority of India)-ஐ பொருத்தவரை சட்டப்படி செல்லுபடியாகும். தொலைதூர கால்களை இந்தியாவின் PSTN-ல் (call termination) முடிவடையச் செய்வது மட்டும் சட்டப்படி குற்றமாகும். call termination என்று சொன்னால் இந்த காலத்தில் மென்பொருளில் இயங்கும் PBX-கள் வந்து விட்டன. மென்பொருள் PBX-களை வைத்துக் கொண்டு இணையத்தின் வாயிலாக அதாவது வாய்ப் வழியாக உலகத்தில் எங்கோ ஆரம்பித்த callகளை இந்தியாவின் தொலைத்தொடர்பு எக்ஸ்சேஞ்களுக்கு அனுப்பி லோக்கல் ரேட்டில் வெளிநாட்டிலிருந்து பேச அனுமதிப்பது மட்டும் சட்டப்படி குற்றமாகும்.மென்பொருள் மற்றுமல்ல VOIP சுவிட்சுகளையும் பயன்படுத்தி இந்த கால் டெர்மினேசன் பண்ணலாம்
தொலைதொடர்பு துறைக்கு இருக்கும் ஒரே நியாயமற்ற கவலை வாய்ப்களால்(VOIP) தொலைத் தொடர்பு துறை நசுங்கி விடுமோ என்ற பயம் தான். கால் டெர்மினேசனுக்கு வாங்கும் கனெக்ஷன் fee -கள் அதிகமாக இருப்பதால் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பேசினாலும் மற்ற நாடுகளுக்கு பேசும் விலையை விட அதிகமாகவே இருக்கும். நாளைய உலகை ஆளப்போவது வாய்ப்கள் தான். வாய்ப்பின் அடுத்த முன்னேற்றம் மொபைல் வாய்ப் கள். நோக்கியாவின் N95 முதலான மொபைல்கள் இணையத்தை wi-fi மூலமாக தொடர்பு கொள்ளும் வசதி உண்டு. இந்த வசதி mobile voip-களுக்கான வித்தாக அமைகிறது. இன்னும் சிறிது காலத்தில் எங்கும் கம்பியில்லா இணையத்தொடர்பாகி(wi-fi) விடும் போது, mobile voip-கள் கொடுக்கப்போகும் வாய்ப்புகள் ஏராளம் என்பது மட்டும் உறுதி.
இந்தியாவில் இன்னும் அமெரிக்கா, ஐரோப்பா போல புற்றீசல் கிளம்பிய மாதிரி வாய்ப் கம்பெனிகள் கிளம்பவில்லை என்பதற்கு TRAI -ன் நியாயமற்ற பயமும், வாய்ப் கம்பெனிகள் மீதான வரி விதிப்புகளும் தான். இந்தியாவிலிருந்து Tringme.com -ன்னு ஒரு வாய்ப் கம்பெனி வச்சிருக்கிறவரு என்னமா கவலை பட்டிருக்கருன்னு இங்கே பாருங்க. இருந்தாலும் இந்தியாவில் போன்வாலா முதல் கொண்டு சிஃபி டாக் வரை எல்லோரும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாயில் உலக நாடுகளை அழைக்கும் வசதியை கொண்டு வந்து விட்டது. இந்தியாவிலிருந்து உலகநாடுகளுக்கு வாய்ப் சர்வீஸ்களை கொடுக்கும் ஒரு பெரிய லிஸ்ட் இங்கே… MTNL-ன் வாய்ப் சர்வீஸ் பற்றி இங்கே….
அதனால் இந்தியாவிலிருந்து VOIP-ல் பேசுவது சட்டப்படி செல்லும்.
தொலைதொடர்பு துறைக்கு இருக்கும் ஒரே நியாயமற்ற கவலை வாய்ப்களால்(VOIP) தொலைத் தொடர்பு துறை நசுங்கி விடுமோ என்ற பயம் தான். கால் டெர்மினேசனுக்கு வாங்கும் கனெக்ஷன் fee -கள் அதிகமாக இருப்பதால் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பேசினாலும் மற்ற நாடுகளுக்கு பேசும் விலையை விட அதிகமாகவே இருக்கும். நாளைய உலகை ஆளப்போவது வாய்ப்கள் தான். வாய்ப்பின் அடுத்த முன்னேற்றம் மொபைல் வாய்ப் கள். நோக்கியாவின் N95 முதலான மொபைல்கள் இணையத்தை wi-fi மூலமாக தொடர்பு கொள்ளும் வசதி உண்டு. இந்த வசதி mobile voip-களுக்கான வித்தாக அமைகிறது. இன்னும் சிறிது காலத்தில் எங்கும் கம்பியில்லா இணையத்தொடர்பாகி(wi-fi) விடும் போது, mobile voip-கள் கொடுக்கப்போகும் வாய்ப்புகள் ஏராளம் என்பது மட்டும் உறுதி.
இந்தியாவில் இன்னும் அமெரிக்கா, ஐரோப்பா போல புற்றீசல் கிளம்பிய மாதிரி வாய்ப் கம்பெனிகள் கிளம்பவில்லை என்பதற்கு TRAI -ன் நியாயமற்ற பயமும், வாய்ப் கம்பெனிகள் மீதான வரி விதிப்புகளும் தான். இந்தியாவிலிருந்து Tringme.com -ன்னு ஒரு வாய்ப் கம்பெனி வச்சிருக்கிறவரு என்னமா கவலை பட்டிருக்கருன்னு இங்கே பாருங்க. இருந்தாலும் இந்தியாவில் போன்வாலா முதல் கொண்டு சிஃபி டாக் வரை எல்லோரும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாயில் உலக நாடுகளை அழைக்கும் வசதியை கொண்டு வந்து விட்டது. இந்தியாவிலிருந்து உலகநாடுகளுக்கு வாய்ப் சர்வீஸ்களை கொடுக்கும் ஒரு பெரிய லிஸ்ட் இங்கே… MTNL-ன் வாய்ப் சர்வீஸ் பற்றி இங்கே….
அதனால் இந்தியாவிலிருந்து VOIP-ல் பேசுவது சட்டப்படி செல்லும்.