Saturday, January 12, 2008

ஊனமுற்றோருக்கான உதவித்தொகை திட்டம்

0 comments
அதிராம்பட்டினத்தில் உள்ள ஊனமுற்றோர் சங்கத்தின் செயாலளர் ஏ.பஹாத் முஹம்மது மற்றும் ஊனமுற்றோர் சங்கத்தின் தலைவர் கரையூர் தெரு மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துறை செய்த 25க்கும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 08.01.08 அன்று ஆட்சியர் விஜயராஜ்குமார் அவர்கள் வழங்கினார்கள். இதற்கு முன்பு ஆட்சியர் நேரடி ஆய்வின் கீழ் அனைவரும் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் பூவாணம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் மனஅழுத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவரை இலவச சிகிச்சைக்காக பெங்களுர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து ஊனமுற்றோர்களும் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் உதவித்தொகையை பெற முன்வருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். ஊனமுற்றோருக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்திவருவதால் அனைத்து ஊனமுற்றோர்களும் இதில் பயனைஅடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் ஊனமுற்றோர் சங்க தலைவர் மாரிமுத்து, செயாலளர் பஹாத் முஹம்மது, வெற்றிலைக்காரத் தெரு அதிரை.

அனைத்து ஊனமுற்றோர்களும் தொடர்புக்கு செல்: 9865939831

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகச்செய்தி

0 comments
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞசர்களுக்குக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோர் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.மனுதரார் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் 2007 டிசம்பர்31 அன்று 45 வயதை கடந்தவராக இருக்க கூடாது.இதர வகுப்பினர் அதேபோன்று 40 வயதை கடந்தவராக இருக்க கூடாது.மனுதாரர் குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 2 ஆயிரத்திற்கு அதிகமாக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி மாணவ,மாணவியராக இருத்தல் கூடாது.தொலைத்தூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். சுயமாக எவ்வித சுயதொழில் செய்பவராகவோ பணம் ஈட்டுபவராகவோ இருத்தல் கூடாது. விண்ணப்ப படிவங்கள் அலுவலக நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அனைத்து அலுவலக நேரங்களிலும், அனைத்து நாட்களிலும் மனுதாரர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் பெற வருவோர் வேலைவாய்ப்பு அடையாள அட்டை,பள்ளி,கல்லூரி சான்றிதழ்,மாற்று சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகள் ஆகியும் வேலையில்லாத இளைஞர்கள் இந்த உதவித்தொகைகான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம்.