Monday, January 14, 2008

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

0 comments

கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு வழங்கப்படுகிறது

0 comments


பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் சிறந்த மனிதர்களுக்கான காமரஜர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டிற்கான கர்மவீரர் காமராஜர் விருது பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.மாரிமுத்து அய்யா அவர்களுக்கு விருதும் 1 லட்ச ரூபாய்கான காசோலை வழங்கபடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மரண அறிவிப்பு

0 comments
அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சார்ந்த தொப்பிக்கார வீட்டு மர்ஹும். அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், காய்கறிக்கடை உதுமான்,மர்ஹும் ஆபுபக்கர்,மர்ஹும் கபீர்,மர்ஹும் அலி ஆகியோரின் சகோதராகிய உமர்தம்பி அவர்கள் இன்று 14/01/08 அன்று காலை 8.45 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னாரின் ஜனஷா இன்று மாலை 4.30 மணிக்கு ஜும்மாபள்ளி மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.


கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹும்.முகைதீன் பிச்சை கனி அவர்களின் மகனும், வரிசை என்கின்ற யாக்கூப் அலி,அஜ்மல்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, புகாரி,நாகூர் பிச்சை, சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரருமாகிய, பசீர், அலி தம்பி மரைக்கான் ஆகியோரின் மாமனாருமாகிய, கே.டி.என். நெய்னா முகம்மது அவர்களின் சாச்சாவுமாகிய ஹவ்லியா முகம்மது அவர்கள் இன்று 14/01/08 மாலை 5. மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் ஜனஷா இன்று இரவு 9.மணிக்கு கடற்கரைத்தெரு மையவாடியில் நல்ல அடக்கம் செய்யப்படும்.


நன்றி : கான் பிரதர்ஸ்

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு

0 comments
அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு நடைபெற்றுவருகிறது. கடந்த 2 வாரங்களாக பல தண்ணீர் மோட்டார்கள்,இரு சக்கர வாகனங்கள்,சைக்கிள்கள் போன்று திருடப்பட்டுவருகிறது.இதே போல் வண்டிப்பேட்டை, ராஜமடம்,செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.ஏற்கனவே காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் இன்னும் எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல் பல தெருக்களிலும் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டி வருகிறது. சிஎம்பி லைன்,நெசவுத்தெரு,கீழத்தெரு ஆகிய பகுதிகளிலும் பல பொருட்கள் திருட்டு போய் உள்ளன.ஆனால் இதுவரைக்கும் யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை.

நெசவுத்தெருவில் உள்ள அல்தாப் என்ற வீட்டில் ஒரு செல் போன் திருட்டுபோய் உள்ளது நேற்று மாலை.
பல மோட்டார்கள் திருடப்பட்டுவருகின்றன. பல தெருக்களில் இரவு நேரங்களில் திருடர்களை பிடிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
உங்களது வீடுகளையும் சுற்று புற வீட்டுகளையும் இரவு நேரங்களில் உங்கள் பார்வையில் இருக்கட்டும். மேலும் இரவு நேரங்களில் சந்தேகம் எற்படும் படி யாராக இருந்தாலும் விசாரித்துக்கொள்வது நல்லது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் உடனே மின் வாரியத்திற்கு தொடர்பு கொள்ளவேண்டுகிறோம்.அதேபோல் சந்தேக நபர்களை பிடித்தால் உடனே காவல் துறை அல்லது பகுதி ஜமாத் தலைவர்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து முதல்வருக்கு கோரிக்கை.

0 comments



நன்றி : தினகரன் தஞ்சை பதிப்பு