Monday, January 14, 2008

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு நடைபெற்றுவருகிறது. கடந்த 2 வாரங்களாக பல தண்ணீர் மோட்டார்கள்,இரு சக்கர வாகனங்கள்,சைக்கிள்கள் போன்று திருடப்பட்டுவருகிறது.இதே போல் வண்டிப்பேட்டை, ராஜமடம்,செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.ஏற்கனவே காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் இன்னும் எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல் பல தெருக்களிலும் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டி வருகிறது. சிஎம்பி லைன்,நெசவுத்தெரு,கீழத்தெரு ஆகிய பகுதிகளிலும் பல பொருட்கள் திருட்டு போய் உள்ளன.ஆனால் இதுவரைக்கும் யாரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை.

நெசவுத்தெருவில் உள்ள அல்தாப் என்ற வீட்டில் ஒரு செல் போன் திருட்டுபோய் உள்ளது நேற்று மாலை.
பல மோட்டார்கள் திருடப்பட்டுவருகின்றன. பல தெருக்களில் இரவு நேரங்களில் திருடர்களை பிடிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
உங்களது வீடுகளையும் சுற்று புற வீட்டுகளையும் இரவு நேரங்களில் உங்கள் பார்வையில் இருக்கட்டும். மேலும் இரவு நேரங்களில் சந்தேகம் எற்படும் படி யாராக இருந்தாலும் விசாரித்துக்கொள்வது நல்லது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் உடனே மின் வாரியத்திற்கு தொடர்பு கொள்ளவேண்டுகிறோம்.அதேபோல் சந்தேக நபர்களை பிடித்தால் உடனே காவல் துறை அல்லது பகுதி ஜமாத் தலைவர்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

0 comments: