Wednesday, January 16, 2008

அதிராம்பட்டினத்தில் பொங்கள் திருநாள்

அதிராம்பட்டினத்தில் தமிழர் திருநாள் பொங்கள் திருநாள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக மக்கள் காலை சூரியனுக்கு முன் பொங்கள் வைத்து சூரியனை வழிபட்டனர்.
அதேபோல் சுற்று பகுதிகளிலும் பொங்கள் திருநாளை கொண்டாடினர்.
தைப்பொங்களை முன்னிட்டு கரும்பு கட்டுகளின் விலை அதிகமானதால் மக்கள் யாரும் கரும்புகட்டுகள் வாங்க முன்வரவில்லை. ஒரு கரும்பு கட்டின் விலை ரூபாய் 150ஆக இருந்தது. அனைத்து வீடுகளிலும் காலை வீட்டின் முன் பூக்கோலம் பொட்டு தைப்பொங்களை கொண்டாடினர்.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்திருநாளை சமத்துவ பொங்கள் தினமாக கொண்டாட கேட்டுக்கொண்டார்கள். முதல்வர் சொன்னதுபோல் அனைத்து ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அலுவலங்களிலும் சமத்துவபொங்கள் கொண்டாடப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்திலும் சமத்துவபொங்கள் கொண்டாடப்பட்டது. தலைவர் அய்யா அப்துல் வஹாப் தலைமை ஏற்று துணைத்தலைவர்,வார்டு கவுன்சிலர்கள்,அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலுல் காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சமத்துவ பொங்கள் கொண்டாடப்பட்டது.




இன்று காணும்பொங்களை முன்னிட்டு முத்தம்மாள் தெரு, கறையூர் தெரு,காந்திநகர்,தரகர் தெரு,செட்டித்தெரு,மிலாரிக்காடு, கரிசைக்காடு,ஏரிப்புறக்கரை,பலஞ்சூர்,புதுக்கோட்டைஉள்ளூர்,மகிழங்கோட்டை,தொக்கலிக்காடு,ராஜமடம்,கொள்ளுக்காடு ஆகிய அதிரை சுற்று வட்டார பகுதிகளில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள்,போட்டிகள் போன்றவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.



மாட்டுப்பொங்கள் நடுவிக்காடு, பள்ளத்தூர்,பேராவூரணி,தம்பிக்கோட்டை,துவரங்குறிச்சி பகுதிகளில் நடைபெறவுள்ளன.
அனைத்து மதத்தினரும் பங்குகொண்ட சமத்துவபொங்கள் பட்டுகோட்டையில் உள்ள வடசேரி ரோட்டில் நடைபெற்றது. மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.




செய்தி : நண்பர்கள் குழு

0 comments: