Sunday, January 06, 2008

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழக சிறப்புக் கூட்டம்

0 comments
31.12.2007 திங்கள் காலை 11 மணியளவில் ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகத் தில் மாநில திராவிடர் மாண வர் கழக அமைப்பாளர் ரெ. ரஞ்சித்குமார் தலைமையிலும், தஞ்சை நகர தலைவர் ப. தேசிங்கு, தஞ்சை ஒன்றிய தலைவர் மு. சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று தஞ்சை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கி. சௌந்தரா சன் உரையாற்றினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் சி. பெரியார்மணி, பட்டுக் கோட்டை மாவட்ட மாணவ ரணி செயலாளர் சி. இரமேஷ், பட்டுக்கோட்டை மாவட்ட மாணவரணி துணைத் தலை வர் கோ. பிரபாகரன் மன்னார் குடி யுவராஜ், மாநில மாண வரணி அமைப்பாளர் ரெ. ரஞ்சித்குமார் ஆகியோர் உரை யாற்றிய பின் மாநில மாணவ ரணி ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் இரா. குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார்.

செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு கருத் துரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு `திராவிடர் மாண வர் கழகம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.



கூட்டத்தில் தஞ்சை இரா. செயக்குமார், தஞ்சை நகர பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் சுந்தர சாம் பசிவம், செயலாளர் ஆசிரியர் கோபு., பழனிவேல், கழக பேச் சாளர்கள் பெரியார் செல்வம், பூவை. புலிகேசி பெரியார் படிப்பக செயலாளர் கை. முகிலன், தஞ்சை நகர பகுத் தறிவாளர் கழக நகர செய லாளர் புலவர் சாமிநாதன் தஞ்சை மாவட்ட ப.க., தலை வர் கோ. கண்ணையன், உரத்த நாடு ஒன்றிய மாணவரணி தலைவர் ச. பிரபாகரன், செய லாளர் க. மணிகண்டன் அமைப்பாளர் இரா. மோகன் தாஸ், தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி மாணவரணி தலைவர் தி. பன்னீர்செல்வம், தஞ்சை நாராயணசாமி, பெரி யார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர்கள், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மன்னர் சரபோசி அரசு கல்லூரி மாணவர்கள், கரந்தை கலைக் கல்லூரி மாணவர்கள், சேரியர் தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்துக் கொண்டு கருத்துக்களை கேட்டனர்.

தஞ்சாவூர் மற்றும் பட் டுக்கோட்டை மாவட்டத்திற்கு திராவிடர் மாணவர் கழக புதிய பொறுப்பாளர்களை திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் ரெ. இரஞ்சித்குமார் வாசித்தார்கள்.
தஞ்சை மாவட்டம்: தலைவர்: சி. பெரியார்மணி; செயலாளர்; எம். மனோ விஜயன், அமைப் பாளர்: சி. பெரியார்மணி.
தஞ்சை நகரம்: தலைவர்: தமிழ்நிலவன்; செயலாளர்: வினோத்.
பட்டுக்கோட்டை மாவட்டம்: தலைவர்: சி. இரமேஷ்; செய லாளர்: இரா. மோகன்தாஸ்; அமைப்பாளர்: கோ. பிரபா கரன்; துணைத் தலைவர்: ரெ. யுவராஜ்; துணைச் செயலாளர்: கே. திலீபன்.
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்: ஆர். அரவிந்த்.
உரத்தநாடு அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்: மா. மகேஸ்வரன்.
இறுதியாக தஞ்சை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சி. திராவிடமணி நன்றி கூறினார்.

மார்ச் 27 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது +2 தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடக்கம் அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவிப்பு

0 comments
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதலும், 10 ஆம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதலும் தொடங்கும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் நேற்று அறிவித்துள்ளது.
இத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
3-3-2008 தமிழ் முதல் தாள்
4-3-2008 தமிழ் இரண்டாம் தாள்
6-3-2008 ஆங்கிலம் முதல் தாள்
7-3-2008 ஆங்கிலம் இரண்டாம் தாள்
10-3-2008 இயல்பியல், வணிகவியல்
11-3-2008 புவியியல்
12-3-2008 வணிக கணிதம்
13-3-2008 வேதியியல்
14-3-2008 அக்கவுன்டன்சி
15-3-2008 உயிரி வேதியியல், ஹோம் சயன்ஸ், நர்சிங் உள்ளிட்ட 5 பாடங்கள்.
17-3-2008 கணிதம், விலங்கியல்
18-3-2008 பொருளாதாரம்
20-3-2008 உயிரியல், தாவரவியல், வரலாறு

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
27-3-2008 தமிழ் முதல் தாள்
28-3-2008 தமிழ் இரண்டாம் தாள்.
31-3-2008 ஆங்கிலம் முதல் தாள்
1-4-2008 ஆங்கிலம் இரண்டாம் நாள்
4-4-2008 கணக்கு
8-4-2008 அறிவியல் 10-4-2008 சமூக அறிவியல்
மெட்ரிக்குலேஷன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பாடத் திட்டங் களின்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முடிவடை கின்றன.

Thanks : Khan Brothers