Saturday, January 12, 2008

ஊனமுற்றோருக்கான உதவித்தொகை திட்டம்

அதிராம்பட்டினத்தில் உள்ள ஊனமுற்றோர் சங்கத்தின் செயாலளர் ஏ.பஹாத் முஹம்மது மற்றும் ஊனமுற்றோர் சங்கத்தின் தலைவர் கரையூர் தெரு மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துறை செய்த 25க்கும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 08.01.08 அன்று ஆட்சியர் விஜயராஜ்குமார் அவர்கள் வழங்கினார்கள். இதற்கு முன்பு ஆட்சியர் நேரடி ஆய்வின் கீழ் அனைவரும் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் பூவாணம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் மனஅழுத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவரை இலவச சிகிச்சைக்காக பெங்களுர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து ஊனமுற்றோர்களும் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் உதவித்தொகையை பெற முன்வருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். ஊனமுற்றோருக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்திவருவதால் அனைத்து ஊனமுற்றோர்களும் இதில் பயனைஅடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் ஊனமுற்றோர் சங்க தலைவர் மாரிமுத்து, செயாலளர் பஹாத் முஹம்மது, வெற்றிலைக்காரத் தெரு அதிரை.

அனைத்து ஊனமுற்றோர்களும் தொடர்புக்கு செல்: 9865939831

0 comments: